/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் கைது
/
இளம்பெண்ணுக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் கைது
ADDED : மார் 11, 2025 07:06 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி கூலியாண்டிகாட்டைசேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் புவனேஷ்வரன், 28; இன்ஜினியரிங் படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுள்ளனர்.
பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. இதனால், நேற்று முன்தினம், பெண் வீட்டிற்கு சென்ற புவனேஷ்வரன், அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணின் கழுத்தில் கட்டாய தாலி கட்டினார். இளம்பெண் சத்தம் போடவே, புவனேஷ்வரன் தப்பி ஓடினார். இளம்பெண் மற்றும் உறவினர்கள் தாலியை கழற்றி வீசிவிட்டு, ராசிபுரம் மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, புவனேஷ்வரனை போலீசார் கைது செய்தனர்.