ADDED : மே 24, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : கோவில்பாளையம் அருகே கள்ளிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த ராஜராஜன், 26, உக்கடம் பகுதியை சேர்ந்த அபிஷேக், 23, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
-----

