sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடிய படகு இல்ல ஏரி

/

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடிய படகு இல்ல ஏரி

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடிய படகு இல்ல ஏரி

சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடிய படகு இல்ல ஏரி


ADDED : செப் 06, 2024 02:56 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால், படகு இல்ல ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாட்கள் காரணமாக தொடர் விடுமுறை இருந்ததால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அதற்கு பின், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

குறிப்பாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் இல்லாமல் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வரும், அக்., நவ., மாதங்களில் நடக்கும், 2-வது சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளுக்கு பூங்கா பணியாளர்கள் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். புல் தரைகள் சமன்படுத்தும் பணி, சாம்பிராணி செடிகளால், வனவிலங்குகளின் வடிவமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us