sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நடைப்பாதையில் விழுந்த மரம் நடந்து செல்வதில் சிக்கல்

/

நடைப்பாதையில் விழுந்த மரம் நடந்து செல்வதில் சிக்கல்

நடைப்பாதையில் விழுந்த மரம் நடந்து செல்வதில் சிக்கல்

நடைப்பாதையில் விழுந்த மரம் நடந்து செல்வதில் சிக்கல்


ADDED : ஜூலை 20, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, ஸ்பென்சர் சாலையில், விழுந்த மரம் முழுமையாக அகற்றப்படாததால் நடைபாதையில் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் பெய்து வரும் கனமழையில், ஆங்காங்கு மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. அரசு துறை ஊழியர்கள் உடனுக்குடன், மரங்களை அறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, ஸ்பென்சர் சாலையில் கடந்த, மூன்று நாட்களுக்கு முன்பு மரம் விழுந்தது. ஊழியர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை.

இருப்பினும், நடைபாதையில் மரம் அறுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. மின் கம்பிகளும் தொங்கி கிடக்கிறது. இதனால், மக்கள் நடந்துச்செல்ல முடியாமல், சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே, அலுவலக தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் நடந்துச்செல்ல எதுவாக, மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us