sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பரிதாப பலி

/

ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பரிதாப பலி

ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பரிதாப பலி

ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ்சில் சிக்கி பரிதாப பலி


ADDED : ஜூலை 02, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுாரில் ஸ்கூட்டியில் சென்ற தொழிலாளி அரசு பஸ் டயரில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

குன்னுார் டைகரில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர், 52. கட்டுமான தொழிலாளி. நேற்று காலை, 9:00 மணி அளவில் டிரம்ளா பகுதியில் இருந்து குன்னுார் நோக்கி ஸ்கூட்டியில் சென்ற போது, பணிக்கு தேவையான மட்டக்கோலை கால் அருகே வைத்து வந்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், குன்னுாரில் இருந்து பில்லி கம்பைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் பெட்போர்டு பகுதியில் சில பயணிகளை ஏற்றி புறப்பட்டது. அப்போது ஆட்டோ, கார் முன்புறம் திடீரென நிறுத்தப்பட்டது.

அப்போது, ஸ்கூட்டியில் சென்ற சுரேந்தர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் தனியாக விழுந்ததுடன், இவரின் தலை அரசு பஸ் பின் டயரில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த காட்சி அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்பர் குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us