ADDED : ஆக 29, 2024 09:59 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரியில் குறு மைய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.
அதில், 14 வயதுக்கு உட்பட்டோருககான, மாவட்ட குறு மைய வளையப்பந்து இறுதிப்போட்டி, பில்லிக்கம்பை பள்ளி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், சோலுார் மட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரவீண் முதல் இடத்தையும், குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் சுஜீத் இரண்டாம் இடத்தையும் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
