sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

/

தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

தேயிலை தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு


ADDED : ஆக 18, 2024 01:34 AM

Google News

ADDED : ஆக 18, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் அருகே, தேயிலை தோட்டத்தில், 12 அடி நீளம் மலைப்பாம்பு பிடிபட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை அருகே கோட்டக்கல் தேயிலை எஸ்டேட்டில் நேற்று, குடியிருப்பு அருகே மலைப்பாம்பு இருப்பதாக தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், ''குன்னூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு 12 அடி நீளமுள்ள மலை பாம்பு தென்பட்டுள்ளது, மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.'' என்றார்.

நெஸ்ட் சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில், நீலகிரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு மழையின் தாக்கம் அதிகரித்து வன வளம் பெருகி வருகிறது.

இதன் காரணமாக, மலை பாம்பு, கிங் கோப்ரா உள்ளிட்ட ஊர்வனங்கள், யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துள்ளது. புலியின் வாழ்விடமாகவும் மீண்டும் இப்பகுதி இருக்கும், என்றார்.






      Dinamalar
      Follow us