ADDED : ஆக 06, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பு, மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் தனியார் தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருப்பதாக வனச்சரகர் அய்யனாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வனக்குழுவினர் சென்று, தேயிலை தோட்டத்திலிருந்து அருகில் உள்ள புதரில் காணப்பட்ட, 20 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை மீட்டனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பு பாதுகாப்பாக எடுத்துச் சென்று, அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த பகுதியில் பணிபுரிந்த தோட்ட தொழிலாளர்களுகஅகு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை.
