sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தலுார் எருமாடு பகுதியில் புதர் சூழ்ந்த நிழற்கூரை

/

பந்தலுார் எருமாடு பகுதியில் புதர் சூழ்ந்த நிழற்கூரை

பந்தலுார் எருமாடு பகுதியில் புதர் சூழ்ந்த நிழற்கூரை

பந்தலுார் எருமாடு பகுதியில் புதர் சூழ்ந்த நிழற்கூரை


ADDED : டிச 15, 2024 11:19 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு, 'ஸ்கூல் ஜங்சன்' பகுதியில் நிழற்கூரை புதர் சூழ்ந்து பயன் இல்லாமல் காணப்படுகிறது.

எருமாடு ஸ்கூல் ஜங்சன் பகுதியில் இருந்து, கள்ளிச்சால், மாதமங்களம், அய்யன்கொல்லி, காரக்கொல்லி, அத்திச்சால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை ஓரத்தில் சேரங்கோடு ஊராட்சி மூலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டது.

இங்கு எந்த வாகனங்களும் நின்று செல்லாத நிலையில், பொதுமக்கள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை.

இதனால், நிழற்கூரை முழுவதும் புதர்கள் சூழ்ந்து, இந்த பகுதிக்கு வேலைக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.

எனவே, இதனை முழுமையாக சீரமைத்து இந்த இடத்தில் வாகனங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us