sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை

/

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய 'மெக் ஐவருக்கு' விரைவில் சிலை


ADDED : மே 23, 2024 11:49 PM

Google News

ADDED : மே 23, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு சிலை வைக்கும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவை, 1848ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சார்ந்த மெக் ஐவர் என்பவர் உருவாக்கினர்.

19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின், 1867ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளை சார்ந்த, 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளன. பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர், 1876ம் ஆண்டு ஜூன் 8 ம் தேதி இறந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்டீபன் சர்ச் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக புகழ் வாய்ந்த பூங்காவை அமைத்த, மெக் ஐவருக்கு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது, மெக் ஐவரின் சிலையை பூங்காவில் நிரந்தரமாக வைக்கும் பணிகளில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்த திறப்பு விழா நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us