sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஏப் 26, 2024 01:41 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி-கோத்தகிரி இடையே, தொட்டபெட்டா பகுதியில், சாலையோர மரம் விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டியில் இருந்து, கோத்தகிரி, தும்மனட்டி மற்றும் கெந்தொரை வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களுக்கு தொட்டபெட்டா சந்திப்பு வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தவிர, இவ்வழித்தடத்தில், ஆயிரக்கணக்கான தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

தொட்டபெட்டா சாலையோரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வானுயர்ந்த மரங்கள் நிறைந்துள்ளன. சாலையோரத்தில் போதிய வேர்ப்பிடிப்பு இல்லாத மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன.

இருப்பினும், முழுமையாக அகற்றப்படவில்லை. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, இரவு மற்றும் காலை நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால், நேற்று காலை, 10:30 மணியளவில், தொட்டபெட்டா ஜங்ஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவில், சாலையோரத்தில் பிடிமானம் இல்லாத மரம் சாலையில் விழுந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் காய்கறி லோடு ஏற்றி, ஊட்டிக்கு சென்றிருந்த லாரி, நுாலிழையில் தப்பியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றி அப்புறப்படுத்தினர்.

இதற்கு இடையில், அரசு பஸ்கள் உட்பட, சுற்றுலா வாகனங்கள் சாலையில் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு மரம் முழுமையாக அகற்றப்படுத்தி அடுத்து போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us