sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வீட்டிற்குள் துதிக்கையை விட்ட காட்டு யானை

/

வீட்டிற்குள் துதிக்கையை விட்ட காட்டு யானை

வீட்டிற்குள் துதிக்கையை விட்ட காட்டு யானை

வீட்டிற்குள் துதிக்கையை விட்ட காட்டு யானை


ADDED : ஜூலை 16, 2024 11:06 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே பெருங்கரை மற்றும் அதனை ஒட்டிய நெல்லியாளம் டான்டீ பகுதியில், கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களை ஒட்டிய புதர் பகுதியில், யானைகள் முகாமிடுவதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், வெளியிடங்களுக்கு சென்று திரும்பும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத சூழலில் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லியாளம் டான்டீ பகுதிக்கு வந்த யானை சுப்ரமணி என்பவரது வீட்டு கதவை உடைத்து துதிக்கையை வீட்டிற்குள் விட்டது. இதனால், வீட்டின் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், வன குழுவினர் வந்து யானையை அங்கிருந்து விரட்டினர்.






      Dinamalar
      Follow us