/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு வழக்கு 29க்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு வழக்கு 29க்கு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 23, 2024 02:46 AM
ஊட்டி;
நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணை, சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை.
அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆஜராகினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகாததால் வழக்கை நீதிபதி ஸ்ரீதரன், இம்மாதம், 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ''வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் இருப்பதால், வழக்கு இம்மாதம், 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்,'' என்றார்.

