ADDED : மே 16, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, : ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் கால்நடைகள் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ஊட்டியில் தற்போது மலர் கண்காட்சி நடந்து வருவதால், பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், பூங்காசாலையில் நாள்தோறும் கால்நடைகள் உலா வருவதால் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.