நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;மாநில அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவிற்கு, லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
பொருளாளர் கைய்யும் பாட்ஷா வரவேற்றார். துணை தலைவர் சுப்ரமணியன் கவுரவித்தார்.
விழாவில், ஆல்துரை, தர்மசீலன், ஊட்டி மலைச்சாரல் கவியரங்க செயலாளர் பிரபு, சுந்தரபாண்டியன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.

