நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் ஈழுவா -தீயா நல சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
குன்னுாரில் நடந்த ஈழுவா- தீயான நலச்சங்க கூட்டத்தில், துணை தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மகளிர் அணி ஜெகதீஸ்வரி, பிந்து ஆகியோர் துவக்கி வைத்தனர். தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில், அக்., மாதம் ஊட்டியில் நடக்கும் சங்கத்தின் முப்பெரும் விழா சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், குன்னுாரில் இருந்து திரளான சங்க உறுப்பினர்கள் பங்கேற்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செந்தில், கண்ணன், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.