sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீர்மட்டம் வனத்தில் கருங்குரங்குகள் ;பாதுகாக்க வேண்டியது அவசியம்

/

நீர்மட்டம் வனத்தில் கருங்குரங்குகள் ;பாதுகாக்க வேண்டியது அவசியம்

நீர்மட்டம் வனத்தில் கருங்குரங்குகள் ;பாதுகாக்க வேண்டியது அவசியம்

நீர்மட்டம் வனத்தில் கருங்குரங்குகள் ;பாதுகாக்க வேண்டியது அவசியம்


ADDED : ஜூன் 26, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் பகுதி வனங்களில் காணப்படும் கருங்குரங்குகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பந்தலுார் பகுதியில் உள்ள வனங்கள், தமிழக--கேரளா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், வனவிலங்குகள் இடம் பெயர்வது அதிகரிக்கிறது. அதில், அழிவின் பட்டியலில் உள்ள கருங்குரங்குகள் தமிழக வனப்பகுதியில் பழங்களை உட்கொள்வதற்காக, கேரளாவில் இருந்து அதிகளவில் வர துவங்கியுள்ளன.

கடந்த காலங்களில் நீலகிரி காடுகளில் வேட்டை கும்பல் கருங்குரங்குகளை வேட்டையாடி வந்தனர். இதன் இறைச்சி மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுவதால், இவ்வகை குரங்குகள் வேட்டை காரர்களால் குறைந்துள்ளன.

தற்போது, பந்தலுார் அருகே நீர்மட்டம், கிளன்ராக் பகுதிகளில் அதிகளவில் இவ்வகை குரங்குகள் காணப்படுகின்றன.

வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில்,' அழிவின் விளிம்பில் உள்ள கருங்குரங்குகளை வேட்டை கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். இப்பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us