/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏற்றம் காணும் தேயிலை தொழில் ஏலத்தில் அதிகரிக்கும் வருமானம்
/
ஏற்றம் காணும் தேயிலை தொழில் ஏலத்தில் அதிகரிக்கும் வருமானம்
ஏற்றம் காணும் தேயிலை தொழில் ஏலத்தில் அதிகரிக்கும் வருமானம்
ஏற்றம் காணும் தேயிலை தொழில் ஏலத்தில் அதிகரிக்கும் வருமானம்
ADDED : ஆக 20, 2024 02:02 AM

குன்னுார்;குன்னுார் தேயிலை ஏலத்தில் ஏற்றம் காணப்பட்டு, 26.19 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது; ஒரே வாரத்தில், 3.12 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்தது.
குன்னுார் ஏல மையத்தில், 33வது ஏலம் நடந்தது. அதில்,'18.65 லட்சம் இலை ரகம், 4.25 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 22.90 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '18.03 லட்சம் கிலோ இலை ரகம், 4.10 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 22.13 லட்சம் கிலோ விற்றது. மொத்த வருமானம், 26.19 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 114.35 ரூபாய் என இருந்தது.
நடப்பாண்டு இதுவரை இல்லாத வகையில், 96.65 சதவீதம் விற்பனையாகியதுடன், சராசரி விலையில் கிலோவுக்கு, 4 ரூபாய் வரை ஏற்றம் கண்டது. ஒரே வாரத்தில், 3.12 கோடி ரூபாய் மொத்த வருமானம் உயர்ந்தது.
'கடந்த, 2022ம் ஆண்டு நடந்த, 33வது ஏலத்தில், 14.34 கோடி ரூபாய்; 2023ம் ஆண்டு, 13.63 கோடி ரூபாய்,' என, மொத்த வருமானம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகர்கள் கூறுகையில், 'வட மாநிலத்தில் கன மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு அடைந்ததால், தென் மாநில தேயிலை துாளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது,' என்றனர்.