sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறை வைத்த கூண்டு: போக்கு காட்டும் கரடி

/

வனத்துறை வைத்த கூண்டு: போக்கு காட்டும் கரடி

வனத்துறை வைத்த கூண்டு: போக்கு காட்டும் கரடி

வனத்துறை வைத்த கூண்டு: போக்கு காட்டும் கரடி


ADDED : ஆக 23, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் கரிமொரா ஹட்டியில் கூண்டில் சிக்காத கரடி, மீண்டும் வந்து செல்வது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னுார் உபதலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி கரி மொராஹட்டி, கரோலினா பகுதிகளில் கடந்த மாதம் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுக்காக கரடிகள் அடிக்கடி வந்து சென்றன.

சில கடைகளின் கதவுகளை உடைத்து எண்ணெய் உட்பட உணவுகளை உட்கொண்டு சென்றன.

இதை தொடர்ந்து, கரிமொரா ஹட்டியில் வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.

எனினும், இந்த பகுதிக்கு வந்த கரடி கூண்டுக்குள் சென்று சிக்காமல் சென்றுள்ளது. மேலும், கரோலினா கிராமத்துக்கு வரும் கரடியை பிடிக்க இதுவரை கூண்டு வைக்கவில்லை.

எனவே, இப்பகுதியில் உலா வரும் கரடிகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us