ADDED : ஜூலை 20, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டி நகர பகுதியில் உள்ள, ஐந்துலாந்தர், கமர்ஷியல் சாலை, ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், கார்டன் சாலைகளில் காலை முதல், மாலை வரை குதிரை, மாடுகள் முகாமிடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சில நேரங்களில் சாலையில் நடமாடும் மக்களை கால்நடைகள் முட்டுவதாலும் பாதிப்பு தொடர்கிறது. இது குறித்தும் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம், ஊட்டி மக்கள் அமைப்பு சார்பில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.