/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2025 11:18 PM
கூடலுார்; 'கூடலுார் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்,' என, மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார்.
கூடலுார் நகர மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சுவீதாஸ்ரீ முன்னிலை வகித்தார்.
உஸ்மான்: கடந்த மாதம் நகர மன்ற கூட்டம் ஏன் நடத்தவில்லை.
தலைவர்: 15ம் தேதி கூட்டம் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25ம் தேதி வரை 'சப்ஜெக்ட்' தயார் செல்லவில்லை. இதனால், கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
உஸ்மான்: தலைவர் கூட்டத்தை நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்க வேண்டும். இனி மன்ற கூட்டத்தை, மாத துவக்கத்தில் நடத்த வேண்டும்.
அனுப்கான்: நகராட்சி பகுதியில், வணிகவளாக கட்டடங்களுக்கு முறையாக வரி கணக்கிடப்படவில்லை. குறைபாடுகள் உள்ளது. இதனால், அதிக வரி செலுக்க வேண்டிய நிலையில் வியாபாரிகள் உள்ளனர்.
ராஜேந்திரன்: கட்டடம் அளவீடு செய்வதில் தவறு நடந்திருக்கலாம். முறையாக அளவீடு செய்திருக்க வேண்டும்.
வருவாய் ஆய்வாளர் எமிமாள்: கட்டட அளவீடு செய்ததில் எந்த தவறும் நடக்கவில்லை. பலர் வீடுகளை வணிக வளாகமாக பயன்படுத்தி வந்தது, கண்டுபிடிக்கப்பட்டு அவை வணிக வளாகமாக மாற்றப்பட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.
அனுப்கான்: கட்டட வரி உயர்வை மறுபரிசீலனை வேண்டும்.
வெண்ணிலா: காந்திநகர் பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில், தண்ணீர் வீணாவதை தடுத்து, பயன்படுத்த வேண்டும்.
பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்: இது தொடர்பாக திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும்.
கவுன்சிலர்கள்: கோடையில், அனைத்து பகுதிகளிலும், தடையின்றி குடிநீர் கிடைக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.