sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கட்டட விரிசல்... நீர் கசிவு... பாதை சேதம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அவலம்

/

கட்டட விரிசல்... நீர் கசிவு... பாதை சேதம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அவலம்

கட்டட விரிசல்... நீர் கசிவு... பாதை சேதம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அவலம்

கட்டட விரிசல்... நீர் கசிவு... பாதை சேதம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அவலம்


ADDED : ஜூலை 22, 2024 02:36 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடங்களில் நீர் கசிவு, விரிசல், சேதமடைந்த நடை பாதையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊட்டி பிங்கர் போஸ்ட்டில் கூடுதல் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 'கல்வி துறை, நில அளவை, கூட்டுறவு, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம்,' உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

அலுவலகங்களில், 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல், கடை நிலை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். துறை சார்ந்த அலுவலகத்தில் பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் பல அலுவலக கட்டடத்திலும் நீர் கசிவு, விரிசல், கட்டடங்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர் பல்வேறு பகுதிகளிலும் ஓடுகிறது.

சில அலுவலக கட்டடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். தரைதள கட்டடத்தில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்கள் குளிரால் அவதியடைந்து வருகின்றனர். தண்ணீர் வசதியின்றி கழிப்பறைகள் பயன்படுத்த முடியாமல் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.

வழுக்கி விழும் அபாயம்


இந்த கட்டடத்தின் அனைத்து பகுதிகளில் அமைக்கப்பட்ட 'டைல்ஸ்கள்' அனைத்தும் போதிய தரம் இல்லாததால் மழைகாலத்தில் பலர் வழுக்கி விழுந்து காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது.

நேற்று பெய்த கனமழையிலும் சிலர் வழுக்கி விழுந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'பொதுபணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சிதிலமடைந்த பகுதிகளை புரைமைக்க வேண்டும்,' என்றார்.






      Dinamalar
      Follow us