sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மின் கம்பிகள் சேதம் இருள் சூழ்ந்ததால் கஷ்டம்

/

மின் கம்பிகள் சேதம் இருள் சூழ்ந்ததால் கஷ்டம்

மின் கம்பிகள் சேதம் இருள் சூழ்ந்ததால் கஷ்டம்

மின் கம்பிகள் சேதம் இருள் சூழ்ந்ததால் கஷ்டம்


ADDED : ஜூலை 22, 2024 10:55 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுாரில் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் விழுந்ததுடன் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.

புரூக்லேண்ட், பழைய அருவங்காடு, உபதலை, கெக்கட்டி, சப்ளைடிப்போ, வெலிங்டன், சிங்கார தோப்பு உட்பட, 24 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாரத் நகர் பகுதியில் நள்ளிரவில் செல்லம்மாள் என்பவரின் வீட்டின் மீது பெரியளவிலான மரம் விழுந்தது.

இதே போல, ஜெகதளா துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் மின்கம்பங்களின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இரு டிரான்ஸ்பார்மர்கள் உயர் மின்னழுத்த கம்பிகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சீரமைப்பு பணிகளை மின் ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us