sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு

/

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு


ADDED : ஏப் 28, 2024 09:06 PM

Google News

ADDED : ஏப் 28, 2024 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;நீலகிரியில் வெயிலின் தாக்கத்தால் பசுந்தேயிலை மகசூல் குறைந்து, தேயிலை உற்பத்தி பாதித்துள்ளது; ஒரே வாரத்தில், 2.24 லட்சம் கிலோ வரத்து குறைந்தது.

குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 17வது ஏலத்தில், '11.33 லட்சம் கிலோ இலை ரகம், 3.45 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 14.78 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.

அதில், '8.13 லட்சம் கிலோ இலை ரகம், 2.83 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என 11.06 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனையானது. 10.84 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 98.90 ரூபாயாக இருந்தது. விலையில் மாற்றம் இல்லை.

கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில், 2.24 லட்சம் கிலோ வரத்து குறைந்தது.

மொத்தம், 74.14 சதவீதம் தேயிலை தூள் விற்ற நிலையில், 1.89 லட்சம் கிலோ துாள் தேக்கமடைந்தது. ஒரே வாரத்தில், 1.87 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.

மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்து போதிய தண்ணீர் கிடைக்காததால் பசுந்தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு வரும் பசுந்தேயிலை வரத்து குறைந்து, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால், விவசாயிகள்; உற்பத்தியாளர்கள்; வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us