/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டெர்பி' குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசு
/
'டெர்பி' குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசு
ADDED : மே 09, 2024 11:39 PM
ஊட்டி;ஊட்டியில், 12ம் தேதி நடக்கும் 'டெர்பி' குதிரை பந்தயத்துக்கு, 77 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் கோடை சீசனின் போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டின், 137-வது குதிரை பந்தயம் கடந்த மாதம், 6-ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இதற்காக சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய போட்டியான நீலகிரிஸ் டெர்பி வரும். 12ம் தேதி நடக்கிறது.
இதற்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் நடந்தது.
மெட்ராஸ் 'ரேஸ் கிளப்' செயலாளர் தர்ம பிரசாத், கோப்பை ஸ்பான்சர் எச்.பி.எஸ்.எல்., நிறுவன தலைவர் சுரேஷ், ரேஸ் கிளப் நிர்வாகி வின்சென்ட் ஆகியோர் கோப்பையை அறிமுகம் செய்தனர்.
மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் தர்ம பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ''குதிரை பந்தயத்தின் முக்கிய நிகழ்வான நீலகிரிஸ் டெர்பி வரும், 12ம் தேதி பகல் 1:00 மணிக்கு நடக்கும். 1,600 மீ., தூரம் பந்தயத்தில், 11 குதிரைகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிக்கு பரிசு தொகையாக, 77 லட்சம் ரூபாய் அறிவிக்கப்படுகிறது.
வெற்றி பெறும் குதிரையின் உரிமையாளருக்கு கோப்பை மற்றும், 38 லட்சத்து 11 ஆயிரத்து 500; பயிற்சியாளருக்கு, 4 லட்சத்து 62 ஆயிரம்; ஜாக்கிக்கு, 3 லட்சத்து 46 ஆயிரத்து 500 வழங்கப்படும்.
இரண்டாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு, 14 லட்சத்து 61 ஆயிரத்து 75 ரூபாய்; மூன்றாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு, 6 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் குதிரைக்கு, 3 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,'' என்றார்.