sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மேட்டுப்பாளையம் வரும் டில்லி கேரட்: விவசாயிகள் கவலை

/

மேட்டுப்பாளையம் வரும் டில்லி கேரட்: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம் வரும் டில்லி கேரட்: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம் வரும் டில்லி கேரட்: விவசாயிகள் கவலை


ADDED : ஜூலை 22, 2024 10:49 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:'டில்லி கேரட் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு வரப்படுவதால், ஊட்டி கேரட் விலை பாதிக்கப்படும்,' என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய விவசாயங்களில் ஒன்றான கேரட் விவசாயம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கேரட் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்று ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு டில்லி கேரட் கொண்டு வரப்படுவதால் நீலகிரி விவசாயிகள் பாதிப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி விவசாயிகள் நல சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ''கடந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் சில மண்டி வியாபாரிகள் டெல்லியில் இருந்து கேரட்டை கொண்டு வந்து ஊட்டி கேரட் என விற்பனை செய்து வந்தனர்.

இதனால், ஊட்டி கேரட் விலை மிகவும் சரிந்தது. நீலகிரி விவசாய சங்கத்தினர் மேட்டுப்பாளையம் மண்டி வியாபாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக டில்லி கேரட் வரத்து நிறுத்தப்பட்டது.

பிறகு டில்லி கேரட் மதுரைக்கு கொண்டு சென்றதால் கொடைக்கானல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒன்று திரண்ட விவசாயிகள் டில்லி கேரட்டை மதுரைக்கு கொண்டு வராமல் தடுத்தனர். இதனால் தற்போது மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு டில்லி கேரட் கொண்டு வரப்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us