/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் கல்லுாரியில் தகராறு போலீசார் விசாரணை
/
தனியார் கல்லுாரியில் தகராறு போலீசார் விசாரணை
ADDED : மே 09, 2024 05:05 AM
ஊட்டி, : ஊட்டி அருகே கேத்தி பகுதியில் உள்ள, தனியார் கல்லுாரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த தகராறு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி அருகே கேத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் படிக்கும் இரண்டு மாணவர்கள் கல்லுாரி விழாவிற்காக குறிப்பிட்ட காலத்தில் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சீனியர் மாணவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே, சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது.
அதில், மாணவர்கள் ஒருவரை தாக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், கல்லுாரி நிர்வாகம் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தது. தகராறில் ஈடுபட்ட, 9 பேரை 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
இச்சம்பவத்தில், இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம் மீது நடந்த தாக்குதல் காரணமாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.