sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி பூஜையிட்டதால் அதிருப்தி

/

மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி பூஜையிட்டதால் அதிருப்தி

மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி பூஜையிட்டதால் அதிருப்தி

மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி பூஜையிட்டதால் அதிருப்தி


ADDED : ஜூலை 05, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;மஞ்சனக்கொரை மயான பகுதியில் துவக்கப்பட உள்ள, குப்பையிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட கோரி, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை பகுதியில் மயானம் உள்ளது. இப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க பூஜை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இங்கு இத்திட்டம் துவக்க கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தும். அங்கு பூமி பூஜை நடந்துள்ளது.

கிராம மக்கள் கூறுகையில், 'மஞ்சனக்கொரை மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் உடனே கைவிட வேண்டும். இது குறித்து கிராம மக்கள் சார்பில் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வில்லையேல் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us