sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வறட்சி எதிரொலி : பசுந்தீவனம் கொள்முதல்

/

வறட்சி எதிரொலி : பசுந்தீவனம் கொள்முதல்

வறட்சி எதிரொலி : பசுந்தீவனம் கொள்முதல்

வறட்சி எதிரொலி : பசுந்தீவனம் கொள்முதல்


ADDED : மார் 31, 2024 09:07 PM

Google News

ADDED : மார் 31, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரியில் தொடரும் வறட்சியால் புல்வெளிகள் காய்ந்து வருவதால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், சமவெளி பகுதிகளில் இருந்து, பசுந்தீவனத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, கடுமையான வெயில் அடித்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு, புல்வெளிகள் பசுமையை இழந்து, செடி, கொடி, புற்கள் காய்ந்து காணப்படுகிறது.

பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாததால், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

வனப்பகுதியை ஒட்டிய மேய்ச்சல் நிலங்களிலும், காய்கறிகளின் இலை, தழை மற்றும் கொடிகளின் கழிவு குறைந்து வருவதால், கால்நடைகளுக்கு புற்கள் கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.

இதனால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், சம வெளி பகுதிகளில் இருந்து, 'ஓட்ஸ், சோளத்தட்டை' உள்ளிட்டவற்றை விலைக்கு வாங்கி, லாரிகளில் கொண்டு வந்து, கால்நடைகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us