sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போதை மாத்திரை: பாலக்காட்டில் இருவர் கைது

/

போதை மாத்திரை: பாலக்காட்டில் இருவர் கைது

போதை மாத்திரை: பாலக்காட்டில் இருவர் கைது

போதை மாத்திரை: பாலக்காட்டில் இருவர் கைது


ADDED : பிப் 28, 2025 10:32 PM

Google News

ADDED : பிப் 28, 2025 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு, ; பாலக்காடு அருகே, பட்டாம்பியில் போதை மாத்திரைகளுடன் இருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, ஷொர்ணூர் டி.எஸ்.பி., மனோஜ்குமார், பட்டாம்பி இன்ஸ்பெக்டர் பத்மராஜன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு பட்டாம்பி அருகே பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றிருந்த நபரை சோதனை செய்த போது, 21.50 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்றழைக்கப்படும் போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர், பட்டாம்பி ஓங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, 56, என்பது தெரிந்தது. கைது செய்த முஸ்தபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல், மண்ணார்க்காடு டி.எஸ்.பி., சுந்தரன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், காஞ்சிரப்புழா பொட்டச்சேரி பகுதியில் சாதிக், 38, என்பவரின் வீட்டை சோதனை செய்ததில், 30 கிராம் எடை கொண்ட 'மெத்தபட்டாமின்' என்றழைக்கப்படும் போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து, சாதிக்கை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us