sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பகலில் சாலையில் வந்த யானை :ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்

/

பகலில் சாலையில் வந்த யானை :ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்

பகலில் சாலையில் வந்த யானை :ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்

பகலில் சாலையில் வந்த யானை :ஓட்டம் பிடித்த உள்ளூர் மக்கள்


ADDED : ஏப் 26, 2024 12:10 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே நெலக்கோட்டை மற்றும் சூசன் பாடி பகுதிகள், -சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன.

இதன் கீழ் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக எல்லை பகுதி அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து தேயிலை தோட்டங்களுக்கு வெளியேறும் யானைகள், கிராமங்களுக்குள் வந்து முகாமிடுகின்றன.

அதில், விலங்கூர் என்ற இடத்தில் முகாமிட்டு வரும் ஒற்றை யானை, அவ்வப்போது நெலாக்கோட்டை சாலையில் உலா வருவதுடன், இப்பகுதி குடியிருப்பு பகுதியில் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த யானை திடீரென பஜார் பகுதியில் வந்ததால் பாதசாரிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், வீட்டிற்கு வெளியே நின்று இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பதுங்கினர்.

பகல் நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி சாலையில், உலா வரும் யானைகளால் கிராம மக்களும் வாகன ஓட்டுனர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எந்த நேரத்தில் யானைகள் தாக்கும் என்ற அச்சத்தில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், இப்பகுதிகளில் பிதர்காடு வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us