sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குரங்குகளால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகள்

/

குரங்குகளால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகள்

குரங்குகளால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகள்

குரங்குகளால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகள்


ADDED : ஆக 19, 2024 01:46 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் சுற்றிச்திரியும் குரங்குகளால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பந்தலுார் பஜார் பகுதியில் சமீப காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக வரும் குரங்குகள் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

வீட்டு கூரைகளின் மீது குரங்குகள் ஓடுவதால் கூரைகள் உடைந்து, தற்போது மழை பெய்து வரும் நிலையில் மழை நீர் முழுவதும் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும், 'வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்வது; தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்க முற்படுவது; விவசாய தோட்டங்களில் புகுந்து பாக்கு மற்றும் காய்களை சேதப்படுத்தி வருவது,' என குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. நகராட்சி அலுவலக வளாகத்தில் முகாமிடும் குரங்குகள், அலுவலகத்திற்குள் புகுந்து கோப்புகளை எடுத்துச் செல்வதும் தொடர்கிறது.

'தொல்லை தரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்துச் செல்ல வேண்டும்,' என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us