ADDED : ஜூலை 01, 2024 02:09 AM
அ நிறம் | அளவு
பந்தலுார்:பந்தலுார் அருகே நேற்று காலை, 6:30 மணிக்கு அத்திச்சால் பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கி காட்டு யானை சாலையில் நடந்து வந்துள்ளது. அதனை பார்த்த சிலரை, யானை துரத்தியதில், ரகு,32, என்பவர் ஓடி விழுந்தார்.
உயிர் தப்பிய அவர், லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யானையை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
