sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடியிருப்புகள் அருகே குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்

/

குடியிருப்புகள் அருகே குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்

குடியிருப்புகள் அருகே குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்

குடியிருப்புகள் அருகே குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்


ADDED : மார் 29, 2024 10:16 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே காவயல் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி குட்டிகளுடன் முகாமிட்ட யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.

பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கையுன்னி செல்லும் சாலையில் காவயல் பகுதியில் நேற்று முன்தினம் பகல் நான்கு குட்டிகளுடன், 8 யானைகள் முகாமிட்டது.

இந்த பகுதியில் யானைகள் தண்ணீர் பருக ஏதுவாக சிறிய தடுப்பணைகள் மற்றும், தீவனங்களும் உள்ளதால் இப்பகுதியில் முகாமிட்டன. குடியிருப்புகள் மற்றும் சாலையை ஒட்டி யானைகள் முகாமிட்டதால், இப்பகுதி மக்களும் சாலையில் நடந்து செல்வோரும் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதி முழுமையாக காட்டுத்தீயில் நாசம் அடைந்த நிலையில், இது போன்ற சதுப்பு நில பகுதிகளில் யானைகளுக்கு உணவு கிடைப்பதால், இதே பகுதியில் தொடர்ச்சியாக முகாமிடும். பொதுமக்கள் பகல் நேரங்களில் நடந்து செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்,' என்றனர். மேலும், இந்த பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us