sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எல்க்ஹில் முருகன் கோவில் திருப்பணிகள் நிறைவு: மார்ச் 16ல் மஹா கும்பாபிஷேகம் மார்ச் 16 ல் மஹா கும்பாபிஷேகம்

/

எல்க்ஹில் முருகன் கோவில் திருப்பணிகள் நிறைவு: மார்ச் 16ல் மஹா கும்பாபிஷேகம் மார்ச் 16 ல் மஹா கும்பாபிஷேகம்

எல்க்ஹில் முருகன் கோவில் திருப்பணிகள் நிறைவு: மார்ச் 16ல் மஹா கும்பாபிஷேகம் மார்ச் 16 ல் மஹா கும்பாபிஷேகம்

எல்க்ஹில் முருகன் கோவில் திருப்பணிகள் நிறைவு: மார்ச் 16ல் மஹா கும்பாபிஷேகம் மார்ச் 16 ல் மஹா கும்பாபிஷேகம்


ADDED : மார் 11, 2025 10:47 PM

Google News

ADDED : மார் 11, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 16ம் தேதி நடக்கிறது.

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோவில் உள்ளது. மாநில அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பிரபலமான மலேசியா முருகன் கோவிலில் உள்ளதை போன்ற, 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

எல்க்ஹில் முருகன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி , கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. வரும்,16ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவை ஒட்டி, 13ம் தேதி காலை 10:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரிகளுடன் தீர்த்த குடங்கள் நகர் வலமாக எடுத்து எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. 14ம் தேதி காலை, 10:15 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஹோமம், மஹா கணபதி ஹோமம், நவகிரக யாகங்கள், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

15ம் தேதி காலை, இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. 16ம் தேதி காலை , 5:30 மணிக்கு மேல் நான்காம் கால வேள்வி , மூலிகை பொருட்கள் வேள்வி, தீபாராதனை , பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை, 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவுக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். மதியம், 3:00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us