ADDED : மே 01, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : கீதா பஜன் அறக்கட்டளை சார்பில், பெரிய குயிலி கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவிலில், ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடக்கிறது. வரும், 5ம்தேதி காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 வரை நடக்கும் இந்த பயிற்சியில், 10 வயது முதல், 17 வயதுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். உடலுக்கும், மனதுக்கும் வலிமை தரும், யோகா, விளையாட்டுகள் மற்றும் தலைமை பண்பு, நினைவாற்றல், தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்படுகிறது.
100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி என்பதால் 8300112434, 9942649941 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

