sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

/

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஏலக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஆக 14, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 14, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;ஏலக்காய், கொள்முதல் விலை கிலோவுக்கு, 3,000 ரூபாய் வரை கிடைப்பதால், கூடலுார் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய அளவில் கேரளாவை அடுத்து, தமிழகம், கர்நாடகாவில் அதிகளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில், தேனி, நீலகிரி கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் விவசாயத்தில் விவசாயிகளை ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலுார் பகுதியில் தனியார் எஸ்டேட்களை தவிர, சிறு விவசாயிகளும் ஏலக்காய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு, அடுத்த மாதம் ஏலக்காய் அறுவடை பணி துவங்க உள்ளது. தற்போது, இதன் கொள்முதல் விலை, 2,900 முதல் 3,000 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'ஏலக்காய்க்கு கடந்த ஆண்டு, 2,000 ரூபாய்க்கு கீழ் விலை கிடைத்து. நடப்பாண்டு, 3,000 ரூபாய்க்கு வரை கொள்முதல் விலை கிடைப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு கேரளாவில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஏலக்காய் வரத்து குறைந்ததால், அதன் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது, 3,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மகசூல் குறைந்து, விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us