sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி

/

தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி

தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி

தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஆக 25, 2024 01:18 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;நீலகிரியில், பரவலாக பெய்த மழைக்கு தேயிலை தோட்டங்களில் இலை வரத்து அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னுார், குந்தா பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. தேயிலை விவசாயிகள் உரமிட்டு தோட்டங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரமிட்டு பராமரித்து வந்த தேயிலைத் தோட்டங்கள் துளிர்விட்டு மகசூல் அதிகரித்துள்ளது.

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக இலை கொள்முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, இலைகளின் தரத்திற்கு ஏற்ப, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 முதல், 24 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us