sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாரியம்மனை வணங்கி தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி

/

மாரியம்மனை வணங்கி தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி

மாரியம்மனை வணங்கி தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி

மாரியம்மனை வணங்கி தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி


ADDED : பிப் 23, 2025 11:45 PM

Google News

ADDED : பிப் 23, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை, மசினகுடி -தெப்பக்காடு சாலையோர வனத்தில் உள்ள, தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் துவங்கினர்.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறட்சியில், வனத்தீ ஏற்படுவதை தடுக்க, வனத்துறையினர் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மசினகுடி- தெப்பக்காடு சாலை ஓரத்தில் செயற்கை தீ மூலம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவங்கினர்.

பணிகளை துவங்கும் முன், சாலையோரம் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

மசினகுடி வனச்சரகர் பாலாஜி, மாணவர்கள் சந்தன்ராஜ், ரகுபதி, காப்பாளர்கள் அந்தோணி எபினேசர், கேத்தன், மோகன் மற்றும் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, சாலையோரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணிகளை துவங்கினர்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஆண்டுதோறும், சாலையோரம் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, தீ தடுப்பு கோடு அமைக்கும் அணி துவங்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டும் பூஜை செய்து பணியை துவங்கி உள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us