sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பாதிப்பு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்

/

குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பாதிப்பு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்

குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பாதிப்பு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்

குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பாதிப்பு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்


UPDATED : மார் 01, 2025 06:57 AM

ADDED : பிப் 28, 2025 10:37 PM

Google News

UPDATED : மார் 01, 2025 06:57 AM ADDED : பிப் 28, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், ; குன்னுார் பாய்ஸ்கம்பெனி அருகே குப்பைக்கு வைத்த தீ பரவியதால் தீயணைப்பு துறையினர், இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தேயிலை தோட்டங்களில் காய்ந்த சருகுகள் மற்றும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வனத்தீ பரவி, பல ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை பாய்ஸ் கம்பெனி பகுதியில் குப்பைக்கு வைத்த தீ அருகில் உள்ள வனப்பகுதியில் பரவியது.

தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், தீயணைப்பு வீரர்கள், பகல், 12:30 மணியிலிருந்து மாலை, 3:00 மணி வரை, இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ அணைக்கும் போது பல இடங்களிலும் கடும் புகை நிலவியதால், மிகவும் சிரமத்துடன் வனத்தீ பரவுவதை தடுத்தனர். இதனால் ஒரு ஏக்கர் பரப்பளவிலான செடிகள் புதர்கள் எரிந்து சேதமானது. தீயணைப்பு அலுவலர் கூறுகையில், 'கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதித்து வருவதால், வனப்பகுதி, குப்பை இவற்றுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றார்.






      Dinamalar
      Follow us