தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்


ADDED : ஜூலை 01, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல், வனவிலங்கு உயிரியல் உள்ளிட்ட, 18 துறைகளில் உள்ள, 1100 க்கும் மேற்பட்ட இடங்களில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.

கடந்த, 2026 –27 ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ள முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.

நடபாண்டில் பி.எஸ்.சி., வனவிலங்கு உயிரியல், கணினி அறிவியல், பி.காம்., சி.ஏ., பி.ஏ., பாதுகாப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினார். நேற்று, காலை கல்லுாரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் , பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மாணவர்கள் கூறுகையில், ‘முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களை, கல்லுாரி துவங்கி ஒரு வாரத்திற்குள்ளாவது விடுதிகளில் சேர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us