/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
/
காட்டெருமை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
ADDED : ஏப் 27, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;முதுமலை கார்குடி வனப்பகுதியில், காட்டெருமை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை கார்க்குடி வனச்சரகம், அரசு பள்ளி மைதானத்தை ஒட்டி, காட்டெருமை உயிரிழந்து கிடந்தது.
வனச்சரகர் விஜய் மற்றும் வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் கட்டெருமைக்கு, 13 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாகவும், பற்களில் தேய்மானம் ஏற்பட்டு, போதுமான உணவு உட்கொள்ள முடியாமல், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது,' என்றனர்.

