sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை

/

காட்டு யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு வனத்துறை விசாரணை


ADDED : ஜூன் 20, 2024 05:17 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முதுமலை மசினகுடி அருகே, காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை, மசினகுடி சீகூர் ஆனைகட்டி அருகே பள்ளத்தாக்கு பகுதியில், இறந்த காட்டு யானையின் எலும்பு கூடுகள் கிடப்பது நேற்று முன்தினம் வன ஊழியர்களுக்கு தெரியவந்தது. மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன், வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதன் உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த காட்டு யானைக்கு, 50 வயது இருக்கும். வயது முதிர்வு அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம். உடல் பாகங்களை பாறு கழுகள் உணவாக்கி கொண்டதால் எலுப்புங்கள் மட்டும் இருந்தது. பாலினம் தெரியவில்லை. டி.என்.ஏ., பரிசோதனைக்காக, மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின்னே, யானை குறித்த முழுவிபரம் தெரியவரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us