/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை இறப்பு வனத்துறையினர் விசாரணை
/
காட்டு யானை இறப்பு வனத்துறையினர் விசாரணை
ADDED : ஜூலை 16, 2024 01:27 AM
கூடலுார்;முதமலை மசினகுடி அருகே, காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை, மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், சீகூர் பீட் பகுதியில், நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தனர்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'யானை இறந்து, ஐந்து நாட்கள் இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது. அதன் உடல் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின் இறந்ததற்கான காரணம் தெரியவரும்,' என, கூறினர்.