/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோரகுந்தா வனத்தில் காட்டு தீ பல ஏக்கரில் காடுகள் சாம்பல்
/
கோரகுந்தா வனத்தில் காட்டு தீ பல ஏக்கரில் காடுகள் சாம்பல்
கோரகுந்தா வனத்தில் காட்டு தீ பல ஏக்கரில் காடுகள் சாம்பல்
கோரகுந்தா வனத்தில் காட்டு தீ பல ஏக்கரில் காடுகள் சாம்பல்
ADDED : மே 05, 2024 01:19 AM

ஊட்டி:நீலகிரி மாவட்ட வனக்கோட்டம், கோரகுந்தா வனப்பகுதி பல ஏக்கர் கொண்டது. தமிழக - கேரளா எல்லையை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் விலை உயர்ந்த காட்டு மரங்கள், மூலிகை செடிகள் பரவலாக உள்ளன.
மேலும், வன விலங்குகள் அதிகளவில் உலா வருகின்றன.
கோடை வறட்சியால் கோரகுந்தா வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டன. நேற்று முன்தினம், கேரள வனத்தில் பரவிய காட்டு தீ, வராகா பள்ளம் வனத்திலிருந்து மேல் நோக்கி பரவி கோரகுந்தா வனப்பகுதியில் பரவியது.
கட்டுக்கடங்காமல் இரு நாட்களாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. வனத்தில் இருந்த சீகை, கற்பூரம் மற்றும் காட்டு மரங்கள் சாம்பலாயின.
வனத்துறையினர் ஆங்காங்கே தீ தடுப்பு கோடுகள் அமைத்துள்ளனர். கடும் வறட்சியால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கோரகுந்தா வனப்பகுதியில் ரேஞ்சர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி வனக்கோட்டத்தில், இம்முறை வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, பந்தலுார், கூடலுார் தாலுகாவுக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி என மார்ச், ஏப்., மாதங்களில், 200 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயால் வனப்பகுதி, வருவாய் நிலம், பட்டா என, பல நுாறு ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.