/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்
/
குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்
குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்
குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 31, 2024 11:59 PM
கூடலுார் : கூடலுார் நகர மன்ற கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் உஸ்மான்: நகரில் நாள்தோறும், 17 டன் குப்பை அகற்றப்படுவதாக கூறுகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லை. ஒப்பந்ததாரர் விதி மீறி செயல்படுவதால், குப்பை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்: அதிகாரியிடம் பேசி முடிவு செய்யப்படும்.
துணைத் தலைவர் சிவராஜ்: இப்பிரச்னையை தொடர்ந்து பேசுகின்றனர். அனைவரும் ஒத்துழைத்து கையெழுதிட்டு, தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
இளங்கோ: நகரில் அகற்றப்படும் குப்பையின் எடையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அனுப்கான்: இது தொடர்பாக ஆய்வு செய்ய தலைவர் அமைத்த கமிட்டி, தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: ஆதாரம் கொடுக்க வேண்டும்.
சத்தியசீலன்: ஆதாரம் உள்ளது. நெல்லியாளம் நகராட்சியின் குப்பையை இங்கு எடுத்து வருகின்றனர்.
ராஜேந்திரன்: விசாரணை செய்யும்போது ஆதாரம் தரப்படும். எனவே முதல் கட்டமாக ஒப்பந்தம் ரத்து செய்யும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
வென்னிலா: ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கும் போது மன்ற கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.