/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதியில் கொட்டப்பட்ட கண்ணாடி துண்டுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
/
வனப்பகுதியில் கொட்டப்பட்ட கண்ணாடி துண்டுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
வனப்பகுதியில் கொட்டப்பட்ட கண்ணாடி துண்டுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
வனப்பகுதியில் கொட்டப்பட்ட கண்ணாடி துண்டுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து
ADDED : ஏப் 30, 2024 01:35 AM

கூடலுார்;கூடலுார் இரும்புபாலம் அருகே சாலையோர வனப்பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளுடன், கண்ணாடி துண்டுகளை கொட்டி உள்ளதால், வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கூடலுார் இரும்புபாலம் வழியாக, பாண்டியார் - புன்னம்புழா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் கரை பகுதியில் பசுமையான வனப்பகுதி உள்ளது. இப்பகுதியின் வனச் சுற்றுச்சூழல், பாதிக்கப்படுவதை தடுக்க, குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் வீசி செல்ல தடையுள்ளது.
இந்நிலையில், இவ்வழியாக பயணிக்கும் கேரள உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள், பயன்படுத்திய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், உணவு கழிவுகளை அங்கு வீசி செல்கின்றனர். இதனால், வனச்சூழல் பாதிக்கப்படுவதுடன், ஆற்று நீர் மாசுபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கவோ, அகற்றவோ இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளுடன் உடைந்த கண்ணாடி துண்டுகளையும் அப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்கள் கூறுகையில், 'பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டிய சாலை ஓரத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி வந்த நிலையில், தற்போது உடைந்த கண்ணாடி துண்டுகளையும் வீசி சென்றுள்ளனர். அப்பகுதியில், உணவு தேடி வரும் வனவிலங்குகளுக்கு, பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, வனத்துறையினர் குப்பை மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகளை அப்பகுதியில் இருந்து அகற்றுவதுடன், அங்கு மீண்டும் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

