sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பள்ளி கட்டடம் சேதம்: சீரமைப்பு பணி தீவிரம்

/

அரசு பள்ளி கட்டடம் சேதம்: சீரமைப்பு பணி தீவிரம்

அரசு பள்ளி கட்டடம் சேதம்: சீரமைப்பு பணி தீவிரம்

அரசு பள்ளி கட்டடம் சேதம்: சீரமைப்பு பணி தீவிரம்


ADDED : மே 23, 2024 11:38 PM

Google News

ADDED : மே 23, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர், மழையில் இடிந்து விழுந்ததை அடுத்து, சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில், பெரும்பாலான நிலங்கள் ஈரம் கண்டுள்ளன.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, பகலில் இடியுடன் பெய்த கன மழையில், கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பள்ளி அருகே அமைந்துள்ள 'சேட்லைன்' மற்றும் காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரி வருவாய் துறையினர் ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன், சாலையில் விழுந்த கற்கள் மற்றும் மண் குவியலை அப்புறப்படுத்தினர். இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது, புதிதாக தடுப்புச் சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us