ADDED : ஆக 20, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;இருகூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கலாம் கனவுகள் அறக்கட்டளை சார்பில், இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கேடயம், சீருடைகள் வழங்கப்பட்டன. தகுதி ஒதுக்கீடு மூலம் குமரகுரு பொறியியல் கல்லுாரியில் சேர்ந்துள்ள தினேஷ்குமாருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் தனபால் மற்றும் நிர்வாகிகள் உதவித்தொகைகளை வழங்கினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

