sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையால் மலை காய்கறி அறுவடை பணியில் தொய்வு; மண்டிகளில் வரத்து குறைவு

/

மழையால் மலை காய்கறி அறுவடை பணியில் தொய்வு; மண்டிகளில் வரத்து குறைவு

மழையால் மலை காய்கறி அறுவடை பணியில் தொய்வு; மண்டிகளில் வரத்து குறைவு

மழையால் மலை காய்கறி அறுவடை பணியில் தொய்வு; மண்டிகளில் வரத்து குறைவு


ADDED : ஜூலை 17, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரியில் பெய்து வரும் கன மழையால், ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு மலை காய்கறி வரத்து குறைந்துள்ளது.

ஊட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பயிரிடப்படும் மலை காய்கறிகள், அறுவடைக்கு பின், ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு விற் பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து மலை காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மழைக்கு அறுவடைக்கு தயாரான மலை காய்கறிகளை எடுத்து வாகனங்களில் கொண்டு வர சிரமம் ஏற்பட்டு வருவதை அடுத்து மலை காய்கறி அறுவடை குறைந்துள்ளது. சராசரியாக, 25 டன் வரை மலை காய்கறிகள் ஊட்டி மார்க்கெட் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த இரு நாட்களாக கன மழையால், 20 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மழை ஓய்ந்த பின், மலை காய்கறி வரத்து மீண்டும் அதிகரிக்க கூடும் என, மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us